search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மங்கலம் ஊராட்சி"

    • மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார்.
    • தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர்.

    மங்கலம்:

    மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவப்படுத்தும் வகையாக இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹாநசீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.நிஷாத் அகமத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சாதிக், மனித நேய தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஷபியுல்லா, ஒன்றிய பொருளாளர் சிக்கந்தர் பாஷா, ஒன்றிய துணை செயலாளர் ஹக்கீம், ஒன்றிய துணை செயலாளர் சதாம் உசேன், மங்கலம் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மங்கலத்தில் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • பயனாளிகளுக்கு கண், நுரையீரல், புற்றுநோய், இருதயநோய், சிறுநீரக பாதிப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

    மங்கலம் :

    மங்கலம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் மங்கலம் ஊராட்சி நிர்வாகம், அபிராமி மருத்துவமனை கோவை, ஈரோடு கேன்சர் சென்டர், திருப்பூர் நுரையீரல் மருத்துவமனை, நம்பிக்கை நமது அமைப்பு, திருப்பூர் ஐ பவுண்டேசன் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமிற்கு மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி- தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் அனைவரையும் வரவேற்றார்.திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியன்ட் மணி, தமிழ்நாடு மருத்துவ சேவை மையம் நிறுவனர் ரஹீம்அங்குராஜ் ஆகியோர் இந்த முகாமிற்கு முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் இத்ரீஸ், அர்ஜீனன், ரபிதீன் எஸ்.டி.பி.ஐ-கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர், த.மு.மு.க நிஷாத், மங்கலம் திமுக இளைஞரணியைச் சேர்ந்த சரவணகுமார், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு கண் சம்மந்தப்பட்ட நோய், நுரையீரல் நோய், புற்றுநோய், இருதயநோய், சிறுநீரக பாதிப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு தமிழக அரசின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • நடமாடும் தகனமேடை வாகனத்தை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • 10 கி.மீ. தொலைவில் உள்ள 10 ஊராட்சிகள், மாநகராட்சி 4 வார்டு பொதுமக்கள் பயனடைவார்கள்.

    மங்கலம் :

    மங்கலம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி பங்களிப்புடன் ரூ.27லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் தகனமேடை வாகனத்தை மங்கலம் ஊராட்சி பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் பி.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர் கொடியசைத்து நடமாடும் தகனமேடை வாகனத்தை தொடங்கிவைத்தனர். விழாவில் ரோட்டரி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நடமாடும் தகனமேடை வாகனம் மூலம் மங்கலம் ஊராட்சி, சுற்றுவட்டார பகுதியில் 10 கி.மீ. தொலைவில் உள்ள 10 ஊராட்சிகள், மாநகராட்சி 4 வார்டு பொதுமக்கள் பயனடைவார்கள். முன்னதாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் நடமாடும் தகனமேடை வாகனத்தின் சாவியை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் வழங்கினர்.

    • தீபாவளியை முன்னிட்டு க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் திருப்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் தலைமையில் தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன்,தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.குமார்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் எஸ்.அசோகன், மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மு.அப்துல்பாரி,ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் , தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் சுமதிசெந்தில், சகாப்தீன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுபாலசுப்பிரமணியம் ,மங்கலம் இளைஞர் அணி அமைப்பாளர் இப்ராஹிம் , முன்னாள் மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் தம்பிரஹீம், காங்கிரஸ் கட்சியின் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சபாதுரை மற்றும் தி.மு.க. கட்சியின் மங்கலம் நிர்வாகிகள் முபாரக்ராஜா , சேக்முஜிபுர் ரகுமான், சுல்தான்பேட்டை நிர்வாகிகள் பண்ணையார்திருமூர்த்தி ,பாலு , முருகன்,கிட்டான்,அர்ஜூனன் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்திலேயே முதன் முறையாக மங்கலம் ஊராட்சிக்கு நடமாடும் எரியூட்டு மின்மயான வாகனம் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.25 லட்சத்தில் தயாரிக்கப்படவுள்ளது.
    மங்கலம்:

    திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் மின்மயானம் இல்லை. ஆகவே மங்கலத்தில் மின்மயானம் அமைத்து தரவேண்டும் அல்லது நடமாடும் எரியூட்டும்  மின்மயான வாகனம் உருவாக்கித்தர வேண்டும் என்பது மங்கலம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் மங்கலம் ஊராட்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் மூர்த்தி தலைமையில் பொதுமக்களின் பங்களி ப்புடன் நடமாடும் எரியூட்டு மின்மயான வாகனம் தயாரிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மூர்த்தி கூறுகையில்:-

    தமிழகத்திலேயே முதன் முறையாக  மங்கலம் ஊராட்சிக்கு  நடமாடும் எரியூட்டு  மின்மயான வாகனம் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.25 லட்சத்தில் தயாரிக்கப்படவுள்ளது.

    இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக நடமாடும் எரியூட்டும் மின்மயான வாகனம் தயாரிப்பதற்கு ரூ.1லட்சத்திற்கான காசோலையை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் ரூ.1லட்சத்திற்கான காசோலையை வழங்கினேன்.

    பின்னர் அந்த காசோலையை செய்தித்துறை அமைச்சர் நடமாடும் எரியூட்டும் மின்மயான வாகனம் தயாரிக்கும் நிறுவனத்திடம் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட பொருப்பாளர் இல.பத்மநாபன் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
    ×